செய்திகள்
குடியாத்தத்தில் கள்ளக்காதல் தகராறில் வாலிபர் கொலையானது அம்பலம்
குடியாத்தத்தில் கள்ளக்காதல் தகராறில் வாலிபரை அவரது நண்பரே கொலை செய்தது போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.
குடியாத்தம்:
குடியாத்தம் திருநகரை சேர்ந்த அப்சர் மகன் சுல்தான் பாஷா (வயது 25). பெங்களூரில் உள்ள கோழி கறி விற்பனை கடையில் வேலை பார்த்து வந்தார். இவர் நேற்று முன்தினம் ஊருக்கு வந்துள்ளார்.
நேற்று காலை சுண்ணாம்பு பேட்டை கவுண்டன்யாஆற்றங்கரை ஓரத்தில் உள்ள சுடுகாட்டில் தலை நசுங்கிய படி ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார்.
இதுபற்றி தகவல் அறிந்த குடியாத்தம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றனர். சுல்தான் இறந்து கிடந்த இடத்தின் அருகே ரத்தக்கறை படிந்த பெரிய கல் ஒன்று கிடந்தது. அதனால் அவரை மர்ம நபர்கள் கல்லால் தலையில் அடித்து கொலை செய்தது தெரிய வந்துள்ளது.
போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு குடியாத்தம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுதொடர்பாக எஸ்.பி. பிரவேஷ்குமார் உத்தரவின்பரில் குடியாத்தம் டி.எஸ்.பி. சரவணன் மேற்பார்வையில் குடியாத்தம் இன்ஸ்பெக்டர் சீனிவாசன், பேரணாம்பட்டு இன்ஸ்பெக்டர் குமார் ஆகியோர் தலைமையில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. அவர்கள் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வந்தனர்.
சந்தேகத்தின்பேரில் குடியாத்தம் மொய்தீன் பேட்டை பீரான் நகரை சேர்ந்த ஹயாத் பாஷா (31) இவர் கோழி ஏற்றி செல்லும் லாரியில் லோடு மேனாக வேலை செய்துவந்தார். போலீசார் இவரிடம் விசாரணை நடத்தினர். இதில் ஹயாத்பாஷா, சுல்தானை கொலை செய்தது தெரியவந்தது.
சுல்தான் பாஷா, ஹயாத் பாஷா இருவரும் நண்பர்கள். ஹயாத் பாஷா வீட்டுக்கு சுல்தான் பாஷா அடிக்கடி சென்று வந்தார்.
அப்போது ஹயாத் பாஷாவின் மனைவிக்கும் சுல்தானுக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது.
இது குறித்து அறிந்த ஹயாத் பாஷா சுல்தான் மற்றும் அவரது மனைவியை பலமுறை எச்சரித்துள்ளார். மேலும் உறவினர்களிடம் புகார் தெரிவித்துள்ளார்.
ஆனால் ஹயாத் பாஷாவின் மனைவியுடன் உள்ள கள்ளத்தொடர்பை சுல்தான் விடவில்லை என கூறப்படுகிறது.
இதையடுத்து நேற்று முன்தினம் இரவு சுல்தானை மது அருந்துவதற்காக ஹயாத் பாஷா அழைத்துச் சென்றுள்ளார். அப்போது சுல்தானுக்கு அதிக அளவு மது ஊற்றி கொடுத்தார்.
இதையடுத்து நள்ளிரவு 1 மணி அளவில் சுல்தானை கவுண்டன்ய ஆற்றுகரையோரம் உள்ள சுடுகாட்டுக்கு அழைத்துச் சென்று அவரது தலையில் கட்டையால் தாக்கினார்.
மேலும் அருகில் இருந்த பெரிய கல்லை எடுத்து சுல்தான் தலைமீது போட்டு கொலை செய்து விட்டு யாருக்கும் தெரியாமல் வீட்டுக்கு வந்ததாக போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளார்.
இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
குடியாத்தம் திருநகரை சேர்ந்த அப்சர் மகன் சுல்தான் பாஷா (வயது 25). பெங்களூரில் உள்ள கோழி கறி விற்பனை கடையில் வேலை பார்த்து வந்தார். இவர் நேற்று முன்தினம் ஊருக்கு வந்துள்ளார்.
நேற்று காலை சுண்ணாம்பு பேட்டை கவுண்டன்யாஆற்றங்கரை ஓரத்தில் உள்ள சுடுகாட்டில் தலை நசுங்கிய படி ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார்.
இதுபற்றி தகவல் அறிந்த குடியாத்தம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றனர். சுல்தான் இறந்து கிடந்த இடத்தின் அருகே ரத்தக்கறை படிந்த பெரிய கல் ஒன்று கிடந்தது. அதனால் அவரை மர்ம நபர்கள் கல்லால் தலையில் அடித்து கொலை செய்தது தெரிய வந்துள்ளது.
போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு குடியாத்தம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுதொடர்பாக எஸ்.பி. பிரவேஷ்குமார் உத்தரவின்பரில் குடியாத்தம் டி.எஸ்.பி. சரவணன் மேற்பார்வையில் குடியாத்தம் இன்ஸ்பெக்டர் சீனிவாசன், பேரணாம்பட்டு இன்ஸ்பெக்டர் குமார் ஆகியோர் தலைமையில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. அவர்கள் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வந்தனர்.
சந்தேகத்தின்பேரில் குடியாத்தம் மொய்தீன் பேட்டை பீரான் நகரை சேர்ந்த ஹயாத் பாஷா (31) இவர் கோழி ஏற்றி செல்லும் லாரியில் லோடு மேனாக வேலை செய்துவந்தார். போலீசார் இவரிடம் விசாரணை நடத்தினர். இதில் ஹயாத்பாஷா, சுல்தானை கொலை செய்தது தெரியவந்தது.
சுல்தான் பாஷா, ஹயாத் பாஷா இருவரும் நண்பர்கள். ஹயாத் பாஷா வீட்டுக்கு சுல்தான் பாஷா அடிக்கடி சென்று வந்தார்.
அப்போது ஹயாத் பாஷாவின் மனைவிக்கும் சுல்தானுக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது.
இது குறித்து அறிந்த ஹயாத் பாஷா சுல்தான் மற்றும் அவரது மனைவியை பலமுறை எச்சரித்துள்ளார். மேலும் உறவினர்களிடம் புகார் தெரிவித்துள்ளார்.
ஆனால் ஹயாத் பாஷாவின் மனைவியுடன் உள்ள கள்ளத்தொடர்பை சுல்தான் விடவில்லை என கூறப்படுகிறது.
இதையடுத்து நேற்று முன்தினம் இரவு சுல்தானை மது அருந்துவதற்காக ஹயாத் பாஷா அழைத்துச் சென்றுள்ளார். அப்போது சுல்தானுக்கு அதிக அளவு மது ஊற்றி கொடுத்தார்.
இதையடுத்து நள்ளிரவு 1 மணி அளவில் சுல்தானை கவுண்டன்ய ஆற்றுகரையோரம் உள்ள சுடுகாட்டுக்கு அழைத்துச் சென்று அவரது தலையில் கட்டையால் தாக்கினார்.
மேலும் அருகில் இருந்த பெரிய கல்லை எடுத்து சுல்தான் தலைமீது போட்டு கொலை செய்து விட்டு யாருக்கும் தெரியாமல் வீட்டுக்கு வந்ததாக போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளார்.
இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.