செய்திகள்
தற்கொலை

சீர்காழியில் குடும்ப பிரச்சினையில் ஓட்டல் தொழிலாளி தூக்குபோட்டு தற்கொலை

Published On 2020-03-14 10:03 GMT   |   Update On 2020-03-14 10:03 GMT
சீர்காழியில் குடும்ப பிரச்சினையில் ஓட்டல் தொழிலாளி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சீர்காழி:

சீர்காழி பிடாரி வடக்கு வீதியை சேர்ந்தவர் அய்யப்பன் (வயது 25). இவர் அதே பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி ஆனந்தி. இவர்களுக்கு திருமணமாகி 1 ½ ஆண்டுகள் ஆகிறது.

இந்த நிலையில் கணவன்- மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சனை காரணமாக தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் மனமுடைந்த அய்யப்பன் நேற்று இரவு வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து தகவலறிந்த சீர்காழி போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிமாறன் , சப்- இன்ஸ்பெக்டர் ராஜா மற்றும் போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்து ஐயப்பன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக த சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News