குடியாத்தத்தில் வாலிபர் கல்லால் அடித்து கொலை
குடியாத்தம்:
குடியாத்தம் திருநகரை சேர்ந்த அப்சர் மகன் சுல்தான் பாஷா (வயது 25) பெங்களூரில் உள்ள கோழி கறி விற்பனை கடையில் வேலை பார்த்து வந்தார்.இவர் நேற்று ஊருக்கு வந்துள்ளார்.
இன்று காலை சுண்ணாம்பு பேட்டை கவுண்டன்யாஆற்றங்கரை ஓரத்தில் உள்ள சுடுகாட்டில் அருகே தலை நசுங்கிய படி ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். இதுபற்றி தகவல் அறிந்த குடியாத்தம் டி.எஸ்.பி சரவணன் சப்-இன்ஸ்பெக்டர் யுவராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றனர்.
சுல்தான் இறந்து கிடந்த இடத்தின் அருகே ரத்தக்கறை படிந்த பெரிய கல் ஒன்று கிடந்தது. அதனால் அவரை மர்ம நபர்கள் கல்லால் தலையில் அடித்து கொலை செய்தது தெரிய வந்துள்ளது.
போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு குடியாத்தம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அவரை கொலை செய்த மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சம்பவம் நடந்த இடத்திற்கு அருகே டாஸ்மாக் கடை உள்ளது. இதில் நேற்று இரவு தகராறு எதுவும் ஏற்பட்டதா என்பது குறித்தும் சுல்தான் பாஷா கொலைக்கான காரணம் குறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் குடியாத்தத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.