செய்திகள்
கைது

பரங்கிமலை ரெயில் நிலையத்தில் 11 திருநங்கைகள் கைது

Published On 2020-03-13 09:27 GMT   |   Update On 2020-03-13 09:27 GMT
பரங்கிமலை ரெயில் நிலையத்தில் பயணிகளை மிரட்டி பணம் வசூலித்த 11 திருநங்கைகளை போலீசார் கைது செய்தனர்.
ஆலந்தூர்:

பரங்கிமலை ரெயில் நிலையத்தில் பயணிகளை மிரட்டி திருநங்கைகள் சிலர் பணம் வசூலிப்பதாகவும், ரெயிலில் பயணம் செய்பவர்களுக்கு தொடர்ந்து தொல்லை கொடுப்பதாகவும் ரெயில்வே போலீசாருக்கு புகார்கள் வந்தன.

இதையடுத்து ரெயில்வே சப்-இன்ஸ்பெக்டர் தனபால் மற்றும் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது பயணிகளை மிரட்டி பணம் வசூலித்த 11 திருநங்கைகளை கைது செய்தனர்.
Tags:    

Similar News