செய்திகள்
கோழிப் பண்ணை

பறவை காய்ச்சல் எதிரொலி- கேரளாவில் இருந்து கோழிகள் ஏற்றி வர தடை

Published On 2020-03-11 10:10 GMT   |   Update On 2020-03-11 10:10 GMT
கேரளாவில் இருந்து கறிக்கோழி, முட்டை, கோழி தீவனங்கள் உள்ளிட்ட பொருட்களை நீலகிரி மாவட்டத்திற்குள்ள கொண்டு வர அம்மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்.
ஊட்டி:

நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கேரளாவில் தற்போது பறவைக்காய்ச்சல் வேகமாகப் பரவி வருகிறது. இதனையொட்டி அருகே உள்ள நீலகிரி மாவட்டத்திற்கு பறவை காய்ச்சல் பரவாமல் இருக்க மாவட்டத்தில் உள்ள அனைத்து சோதனைச் சாவடிகளிலும் வாகனங்கள் தீவிரமாக கண்காணிக்கப்படுகின்றன.

கேரளாவில் இருந்து வரும் அனைத்தும் வாகனங்களும் தீவிர சோதனைக்கு பின்னரே மாவட்டத்திற்கு அனுமதிக்கப்படுகிறது.

மருத்துவ குழுவினர் அங்கு முகாமிட்டு வாகனங்களில் கிருமி நாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இதையடுத்து கேரளாவில் இருந்து கறிக்கோழி, முட்டை, கோழி தீவனங்கள் உள்ளிட்ட பொருட்களை நீலகிரி மாவட்டத்திற்குள்ள கொண்டு வர தடை விதிக்கப்படுகிறது. எனவே சோதனை சாவடிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளவர்கள் கோழி தீவனம் ஏற்றி வரும் லாரிகளை மாவட்டத்திற்குள் அனுமதிக்க வேண்டாம். மேலும் பொதுமக்களும் இதற்கு ஒத்துழைப்பு தர வேண்டும்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Tags:    

Similar News