செய்திகள்
மயிலாடுதுறை அருகே 4 குடிசை வீடுகள் எரிந்து நாசம்
மயிலாடுதுறை அருகே தீ மளமளவென பரவி 4 வீடுகளும் முற்றிலும் எரிந்தது இதன் மதிப்பு சுமார் 10 லட்சம் இருக்கும் என தெரியவருகின்றது.
மயிலாடுதுறை:
மயிலாடுதுறை நகரின் மத்தியில் உள்ள கலைஞர்நகரை சேர்ந்தர் அன்புராஜா.. இவர் மது போதையில் தனது வீட்டை எரித்துள்ளார். அப்போது இவரின் வீடடின் அருகே இருந்த முத்துலெட்சுமி,கிரிஜா,மேரி என்பவர் வீடும் பற்றியது தீ மளமளவென பரவி 4 வீடுகளும் முற்றிலும் எரிந்தது இதன் மதிப்பு சுமார் 10 லட்சம் இருக்கும் என தெரியவருகின்றது.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் மயிலர்டுதுறை தீயணைப்பு நிலைய அலுவலர் முத்துகுமார் அவர்கள் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து மேலும் தீ பரவாமல் தடுத்தனர். சம்பவ இடத்திற்கு வட்டாச்சியர் முருகானந்தம் ஆர்.ஐ. ராஜேஷ்குமார் மற்றும் அரசு அலுவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.