செய்திகள்
வயநாட்டில் பெண் பலி - குரங்கு காய்ச்சலுக்கு மேலும் 20 பேர் ஆஸ்பத்திரியில் அனுமதி
வயநாட்டில் குரங்கு காய்ச்சலுக்கு பெண் பலியானதையடுத்து மேலும் 20 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கூடலூர்:
கேரள மாநிலம் கோழிக்கோடு கண்ணனூர் மாவட்டங்களில் பறவைக்காய்ச்சல் பரவி வரும் நிலையில் கூடலூர்-கேரளா எல்லையில் உள்ள வயநாடு மாவட்டத்தில் குரங்கு காய்ச்சலும் தீவரமாக பரவி வருகிறது.
ஏற்கனவே உலகம் முழுவதும் பல நாடுகளில் கொரோனா தாக்குதலால் பலர் உயிரிழந்துள்ளனர். இந்தநிலையில் கேரளாவில் பறவைக்காய்ச்சல், குரங்கு காய்ச்சல் பரவி மக்களை அச்சுறுத்தி வருகிறது.
கர்நாடகாவில் பரவிய குரங்கு காய்ச்சல் படிபடியாக கேரளாவிலும் பரவி வருகிறது. இந்த காய்ச்சலுக்கு 2010-ம் ஆண்டு 2 பேர் பலியானார்கள். இதன் பிறகு தான் குரங்கு காய்ச்சல் பாதிப்பு குறித்து பொதுமக்களுக்கு தெரியவந்தது.
கடந்த 2014-ம் ஆண்டு அதிகபட்சமாக 11 பேர் குரங்கு காய்ச்சலுக்கு பலியானார்கள். தற்போது வயநாட்டில் 20-க்கும் மேற்பட்டோர் குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களை அப்பகுதியில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இந்நிலையில் வயநாடு மாவட்டம் மானந்தவாடி தாலுகா காட்டிகுளம் நாரஞ்சாகுன்னு காலனியை சேர்ந்த ராஜி என்பவரது மனைவி மீனாட்சி (வயது 48). இவருக்கு சில நாட்களாக காய்ச்சல் இருந்து வந்தது. ஆனால் சாதாரண காய்ச்சலாக இருக்கும் என்று எண்ணி மீனாட்சி சரியான சிகிச்சை பெறாமல் இருந்து வந்ததாக தெரிகிறது.
பின்னர் காய்ச்சல் பாதிப்பு அதிகமானதால் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். அதில் அவருக்கு குரங்கு காய்ச்சல் இருப்பது தெரியவந்தது. இதனால் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் மீனாட்சி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். குரங்கு காய்ச்சல் மீண்டும் பரவ தொடங்கியதால் வயநாடு மாவட்டத்தில் பொதுமக்கள் பீதியில் உள்ளனர்.
கேரள மாநிலம் கோழிக்கோடு கண்ணனூர் மாவட்டங்களில் பறவைக்காய்ச்சல் பரவி வரும் நிலையில் கூடலூர்-கேரளா எல்லையில் உள்ள வயநாடு மாவட்டத்தில் குரங்கு காய்ச்சலும் தீவரமாக பரவி வருகிறது.
ஏற்கனவே உலகம் முழுவதும் பல நாடுகளில் கொரோனா தாக்குதலால் பலர் உயிரிழந்துள்ளனர். இந்தநிலையில் கேரளாவில் பறவைக்காய்ச்சல், குரங்கு காய்ச்சல் பரவி மக்களை அச்சுறுத்தி வருகிறது.
கர்நாடகாவில் பரவிய குரங்கு காய்ச்சல் படிபடியாக கேரளாவிலும் பரவி வருகிறது. இந்த காய்ச்சலுக்கு 2010-ம் ஆண்டு 2 பேர் பலியானார்கள். இதன் பிறகு தான் குரங்கு காய்ச்சல் பாதிப்பு குறித்து பொதுமக்களுக்கு தெரியவந்தது.
கடந்த 2014-ம் ஆண்டு அதிகபட்சமாக 11 பேர் குரங்கு காய்ச்சலுக்கு பலியானார்கள். தற்போது வயநாட்டில் 20-க்கும் மேற்பட்டோர் குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களை அப்பகுதியில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இந்நிலையில் வயநாடு மாவட்டம் மானந்தவாடி தாலுகா காட்டிகுளம் நாரஞ்சாகுன்னு காலனியை சேர்ந்த ராஜி என்பவரது மனைவி மீனாட்சி (வயது 48). இவருக்கு சில நாட்களாக காய்ச்சல் இருந்து வந்தது. ஆனால் சாதாரண காய்ச்சலாக இருக்கும் என்று எண்ணி மீனாட்சி சரியான சிகிச்சை பெறாமல் இருந்து வந்ததாக தெரிகிறது.
பின்னர் காய்ச்சல் பாதிப்பு அதிகமானதால் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். அதில் அவருக்கு குரங்கு காய்ச்சல் இருப்பது தெரியவந்தது. இதனால் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் மீனாட்சி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். குரங்கு காய்ச்சல் மீண்டும் பரவ தொடங்கியதால் வயநாடு மாவட்டத்தில் பொதுமக்கள் பீதியில் உள்ளனர்.