செய்திகள்
வேலூர் அருகே குடிபோதையில் வாலிபர் மரணம்
வேலூர் அருகே குடிபோதையில் தூங்கிய வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து விரிஞ்சிபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலூர்:
வேலூர் அருகே உள்ள மேல் மொணவூர் இலங்கை தமிழர்கள் குடியிருப்பை சேர்ந்தவர் அஜித்குமார் (வயது 35).
இவர் நேற்று இரவு மது குடித்துவிட்டு போதையில் அங்கேயே படுத்தார். இன்று காலை நீண்ட நேரமாகியும் அவர் எழுந்திருக்கவில்லை. இதையடுத்து அவரை வேலூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
அங்கு பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து விரிஞ்சிபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.