குத்தாலம் அருகே வீட்டின் மேற்கூரையை பிரித்து நகை-பணம் கொள்ளை
குத்தாலம்:
நாகை மாவட்டம் குத்தாலம் தாலுகா நெய்குப்பை கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி கண்ணன் (வயது 44).
இந்த கிராமத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட நகரில் இடம் வாங்கி கூறைவீடு கட்டி இவரும், இவரது மனைவி மற்றும் 2 குழந்தைகளும் வசித்து வருகின்றனர். புதிதாக உருவாகிய நகர் என்பதால் இப்பகுதிக்கு இன்னமும் மின் இணைப்பு வழங்கப்படவில்லை. மேலும் இப்பகுதியில் ஆள் நடமாட்டமும் மிகக் குறைவு.
தனது வீட்டில் சோலார் மூலம் மின்வசதி ஏற்படுத்தியிருந்த விவசாயி கண்ணன், சோலார் மின்சக்தி இன்றி விளக்குகள் மற்றும் மின்விசிறி அணைந்ததால், வீட்டை பூட்டிவிட்டு, தனது குடும்பத்தினருடன் வீட்டு வாசலில் படுத்து உள்ளனர்.
இந்நிலையில், அப்பகுதியில் ஆள்நடமாட்டம் இல்லாதததைப் பயன்படுத்தி மர்மநபர்கள், கண்ணனின் வீட்டு பின்பக்கம் வழியாக கூரைமேல் ஏறி, கூறையைப் பிரித்து வீட்டுக்குள் இறங்கி, அவர் வீட்டில் வைத்திருந்த 9 பவுன் நகை மற்றும் ரூ.3 லட்சம் ரொக்கப்பணத்தை திருடிச் சென்றுள்ளனர்.
இதுகுறித்து, பெரம்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நள்ளிரவில் நடைபெற்ற இந்த கொள்ளைச் சம்பவம் கிராம மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.