செய்திகள்
கொரோனா வைரஸ்

கொரோனா வைரஸ் தாக்கிய என்ஜினீயர் குடும்பத்தினர் 19 பேர் மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர்- கலெக்டர்

Published On 2020-03-08 10:16 GMT   |   Update On 2020-03-08 10:46 GMT
கொரோனா பாதிப்புக்குள்ளான என்ஜினீயர் குடும்பத்தினர் 19 பேரை சுகாதார துறையினர் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

காஞ்சிபுரம்:

மஸ்கட்டில் இருந்து சொந்த ஊருக்கு திரும்பிய காஞ்சிபுரம் என்ஜினீயருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக வெளியான தகவல் மாவட்டம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கொரோனா பாதிப்பு என்ஜீனியர் பற்றிய தகவல்களை சுகாதாரத்துறையினர் மிகவும் ரகசியமாக வைத்துள்ளனர். என்ஜீனியரின் குடும்பத்தினரை மருத்துவ அதிகாரிகள் கண்காணித்து வருகிறார்கள்.

இது தொடர்பாக காஞ்சிபுரத்தில் மாவட்ட கலெக்டர் பொன்னையா, இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

கொரோனா பாதிப்புக்குள்ளான இளைஞரின் குடும்பத்தினர் 19 பேரை சுகாதார துறையினர் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். அவர்களுக்கு மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டு வருகின்றன என்றார்.

Tags:    

Similar News