செய்திகள்
மரணம்

பெருந்துறை அருகே கிரேன் மோதி முதியவர் பலி

Published On 2020-02-21 09:43 GMT   |   Update On 2020-02-21 09:43 GMT
ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே கிரேன் மோதிய விபத்தில் முதியவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெருந்துறை:

பெருந்துறையை அடுத்துள்ள பெத்தாம்பாளையம் ரோடு, எல்லப்பாளையம் புதூர் பகுதியை சேர்ந்தவர் நல்லசாமி(58). விவசாயியான இவர் தனது வீட்டில் இருந்து அந்த பகுதியில் தினமும் மாலை வேளையில் வாக்கிங் செல்வது வழக்கம். நேற்று மாலை 7 மணிக்கு வழக்கம் போல் நல்லசாமி பெத்தாம்பாளையம் ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது அவருக்கு பின்னால் வந்த கிரேன் ஒன்று எதிர்பாராதவிதமாக நல்லசாமியின் மீது மோதியது. இதில் கீழே விழுந்த நல்லசாமியின் தலைமீது கிரேன் ஏறி இறங்கியது. இதில் சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி அவர் பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து வழக்கு பதிவுசெய்த பெருந்துறை போலீசார் உடலை கைப்பற்றி பெருந்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இறந்து போன நல்லசாமிக்கு சரஸ்வதி என்ற மனைவியும், தர்சன் என்ற மகனும் உள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Tags:    

Similar News