செய்திகள்
சஸ்பெண்டு

விமான நிலையம் அமையும் வரைபடம் வெளியான விவகாரம்- தாசில்தார் ‘திடீர்’ சஸ்பெண்டு

Published On 2020-02-20 10:01 GMT   |   Update On 2020-02-20 10:01 GMT
சென்னை விமான நிலையம் அமையும் வரைபடம் வெளியான விவகாரத்தில் தாசில்தாரை சஸ்பெண்டு செய்து காஞ்சீபுரம் கலெக்டர் நடவடிக்கை எடுத்துள்ளார். இது அதிகாரிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

காஞ்சீபுரம்:

சென்னை விமான நிலையத்தில் இடப்பற்றாக்குறை காரணமாக இரண்டாவது விமான நிலையம் அமைக்க அரசு முடிவு செய்து உள்ளது.

இதற்காக காஞ்சீபுரம், திருவள்ளுர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் இடம் ஆய்வு செய்யப்பட்டது.

இந்த ஆய்வில் காஞ்சீபுரம் தாலுக்கா பரந்தூர் பகுதியில் 4500 ஏக்கர் நிலம் விமான நிலையத்திற்கு ஏற்றதாக இருப்பதாக தேர்வு செய்யப்பட்டது. அந்த இடம் குறித்து நிலஅளவை துறையினர் வரைபடம் ஒன்றை தயாரித்து வருவாய் துறையினரிடம் கொடுத்து இருந்தனர்.

பாதுகாப்பாக வைக்கப்பட்ட வேண்டிய அந்த வரைபடம் பொதுமக்களின் வாட்ஸ் ஆப் குழுக்களில் பரவியது. இதனால் அதிருப்தியடைந்த காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையா வரைபடத்தை கசிய விட்டதாக நில எடுப்பு தாசில்தார் கருணாகரனை சஸ்பென்ட் செய்து உத்தரவிட்டு உள்ளார். இது அதிகாரிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News