பெருந்துறை அருகே பஸ் மோதி வேன் டிரைவர் பலி
பெருந்துறை:
பவானி, சங்கர கவுண்டன் பாளையம் பகுதியை சேர்ந்தவர் மணி (வயது 60). இவர் சித்தோடு பகுதியில் உள்ள ஒரு தனியார் டையிங் கம்பெனியில் மினிடோர் வேன் டிரைவராக வேலை பார்த்து வந்தார்.
இவர் விஜயமங்கலம் பகுதியில் உள்ள ஒரு கம்பெனிக்கு டையிங் பொருட்களை லோடு இறக்கி விட்டு மீண்டும் சித்தோடு சென்று கொண்டிருந்தார். சிப்காட் அருகே உள்ள ஏரிக் கருப்பராயன் கோவில் அருகே அவர் வந்து கொண்டிருந்தார். அப்போது, பின்னால் பெங்களூரு நோக்கி சென்ற தனியார் டிராவல்ஸ் பஸ் ஒன்று எதிர்பாராதவிதமாக வேனின் பின்பகுதியில் மோதியது. இதில் வேனை ஓட்டி வந்த டிரைவர் மணிக்கு தலை மற்றும் உடலில் பலத்த அடிபட்டது.
அவரை அக்கம் பக்கத்தி னரால் மீட்கப்பட்டு பெருந்துறை ஐஆர்டி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து பெருந்துறை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.