செய்திகள்
ஸ்ரீமுஷ்ணம் அருகே தனியார் கல்லூரி பஸ் கவிழ்ந்தது: 50 மாணவ-மாணவிகள் காயம்
ஸ்ரீமுஷ்ணம் அருகே தனியார் கல்லூரி பஸ் கவிழ்ந்த விபத்தில் 50 மாணவ-மாணவிகள் காயம் அடைந்தனர். அரசு ஆஸ்பத்திரியில் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
ஸ்ரீமுஷ்ணம்:
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணத்தில் தனியார் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் சேத்தியாத்தோப்பு மற்றும் அதனை சுற்றி உள்ள கிராமங்களை சேர்ந்த ஏராளமான மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள். இவர்கள் தினசரி கல்லூரி பஸ்களில் கல்லூரிக்கு சென்று வருகிறார்கள்.
அதன்படி இன்று காலை சேத்தியாத்தோப்பில் இருந்து ஸ்ரீமுஷ்ணம் நோக்கி கல்லூரி பஸ் புறப்பட்டு வந்தது. இந்த பஸ்சில் சுமார் 50-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் இருந்தனர்.
இந்த பஸ் சாஸ்தா வட்டம்- நாச்சியார்பேட்டைக்கும் இடைப்பட்ட பகுதியில் வேகமாக சென்று கொண்டு இருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக டிரைவரின் கட்டுபாட்டை இழந்தது. தறிகெட்டு ஓடிய அந்த பஸ் சாலை ஓர பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் பஸ்சில் வந்த 50 மாணவ-மாணவிகள் காயம் அடைந்தனர். அவர்கள் வேதனையால் அலறி துடித்தனர்.
சத்தம் கேட்டு அந்த பகுதியில் உள்ளவர்கள் ஓடி வந்தனர். காயம் அடைந்த மாணவ-மாணவிகள் 108 ஆம்புலன்ஸ் வேன்கள் மூலம் ஸ்ரீமுஷ்ணம், சேத்தியாத்தோப்பு, விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதுகுறித்து சேத்தியாத்தோப்பு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணத்தில் தனியார் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் சேத்தியாத்தோப்பு மற்றும் அதனை சுற்றி உள்ள கிராமங்களை சேர்ந்த ஏராளமான மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள். இவர்கள் தினசரி கல்லூரி பஸ்களில் கல்லூரிக்கு சென்று வருகிறார்கள்.
அதன்படி இன்று காலை சேத்தியாத்தோப்பில் இருந்து ஸ்ரீமுஷ்ணம் நோக்கி கல்லூரி பஸ் புறப்பட்டு வந்தது. இந்த பஸ்சில் சுமார் 50-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் இருந்தனர்.
இந்த பஸ் சாஸ்தா வட்டம்- நாச்சியார்பேட்டைக்கும் இடைப்பட்ட பகுதியில் வேகமாக சென்று கொண்டு இருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக டிரைவரின் கட்டுபாட்டை இழந்தது. தறிகெட்டு ஓடிய அந்த பஸ் சாலை ஓர பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் பஸ்சில் வந்த 50 மாணவ-மாணவிகள் காயம் அடைந்தனர். அவர்கள் வேதனையால் அலறி துடித்தனர்.
சத்தம் கேட்டு அந்த பகுதியில் உள்ளவர்கள் ஓடி வந்தனர். காயம் அடைந்த மாணவ-மாணவிகள் 108 ஆம்புலன்ஸ் வேன்கள் மூலம் ஸ்ரீமுஷ்ணம், சேத்தியாத்தோப்பு, விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதுகுறித்து சேத்தியாத்தோப்பு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.