செய்திகள்
விபத்து

வேதாரண்யம் அருகே விபத்தில் கொத்தனார் பலி

Published On 2020-02-08 08:13 GMT   |   Update On 2020-02-08 08:13 GMT
வேதாரண்யம் அருகே விபத்தில் கொத்தனார் பலியான சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
வேதாரண்யம்:

வேதாரண்யம் தாலுக்கா மகராஜபுரம் பகுதியைச் சேர்ந்தவர் காளிமுத்து (வயது 32) கொத்தனார். இவருக்கு திருமணமாகி அனிதா என்ற மனைவியும் மிஸ்வந்த்(3) என்ற மகனும் உள்ளனர்.

சம்பவத்தன்று கள்ளிமேடு பகுதியில் வேலையை முடித்துவிட்டு மோட்டார் சைக்கிளில் ஊருக்கு திரும்பி கொண்டிருந்தார். அப்போது அவரிக்காடு-உம்பளச்சேரி சாலையில் செல்லும்போது எதிரே திருவாரூர் மாவட்டம், குன்னூர், தோளாச்சேரி பகுதியிலிருந்து தன் தாயாருடன் மோட்டார் சைக்கிளில் வந்த விவசாயி சுபாஷ்(34) என்பவர் எதிரே வந்தபோது இரண்டு மோட்டார் சைக்கிள்களும் நேருக்குநேர் மோதிக்கொண்டது.

இதில் காளிமுத்து தலையில் அடிபட்டு பலத்த காயமடைந்தார். இதில் சுபாசுக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. இருவரும் திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் சிகிச்சை பலனின்றி காளிமுத்து இறந்துவிட்டார். சுபாஷ் திருவாரூர் மருத்துமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

புகாரின் பேரில் கரியாப்பட்டினம் இன்ஸ்பெக்டர் பொறுப்பு சுபாஷ் சந்திரபோஸ் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News