செய்திகள்
காரில் கடத்தி வரப்பட்ட செம்மரம்

ஆம்பூர் அருகே செம்மரம் கடத்திய கார் பறிமுதல்

Published On 2020-02-07 12:08 GMT   |   Update On 2020-02-07 12:08 GMT
ஆம்பூர் அருகே வனத்துறையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது காரில் கடத்தி வரப்பட்ட செம்மர கட்டைகளை பறிமுதல் செய்தனர்.

ஆம்பூர்:

ஆம்பூர் உதவி வன அலுவலர் ராஜ்குமார், வனச்சரகர் இளங்கோ தலைமையில் வனத்துறையினர் இன்று காலை ஆம்பூர் அடுத்த வெள்ளக்குட்டை சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது அவ்வழியாக வந்த காரை திடீரென நிறுத்தி விட்டு காரில் இருந்தவர்கள் தப்பி ஓடினர் . இதனால் சந்தேகமடைந்த வனத்துறையினர் அங்கு சென்று காரில் சோதனை நடத்திய போது 6 செம்மர கட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

இதையடுத்து வனத்துறையினர் காரை மீட்டு ஆம்பூர் வனத்துறை அலுவலகத்திற்கு கொண்டு வந்தனர். காரில் செம்மரம் கடத்தி வந்தவர்கள் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்கள்? ஆந்திராவிலிருந்து செம்மரம் கடத்தி வரப்பட்டதா? என பல்வேறு கோணங்களில் வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News