செய்திகள்
கோப்புப்படம்

ஆற்காடு அருகே மின்சாரம் தாக்கி விவசாயி பலி

Published On 2020-02-07 16:20 IST   |   Update On 2020-02-07 16:20:00 IST
ஆற்காடு அருகே மின்சாரம் தாக்கியதில் விவசாயி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆற்காடு:

ஆற்காடு அடுத்த விளாப்பாக்கம் முருகேச முதலியார் தெருவை சேர்ந்தவர் முருகன் (62) விவசாயி. இவரது 2 மகன்கள் ரணுவத்தில் வேலை செய்து வருகின்றனர்.

முருகனுக்கு விளாபாக்கம் அடுத்த சாத்தூர் கூட்டுரோடு அருகே விவசாய நிலம் உள்ளது. அதில் நெல் கரும்பு பயிரிட்டு உள்ளனர். பன்றிகள், எலிகள் தொல்லை இருந்ததால் விவசாய நிலத்தை சுற்றி மின்சார வேலி அமைத்திருந்தார்.

இந்த நிலையில் நேற்றிரவு முருகன் பயிருக்கு தண்ணீர் பாய்க்க சென்றார். பின்னர் வீடு திரும்பவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவரது உறவினர்கள் விவசாய நிலத்திற்கு சென்று பார்த்தபோது அங்கு மின்சாரம் தாக்கி முருகன் இறந்து கிடந்தார்.

இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் முருகன் பிணத்தை மீட்டு போலீசாருக்கு தகவல் தெரிவிக்காமல் வீட்டிற்கு கொண்டு சென்றனர். இதுகுறித்து தகவல் அறிந்த திமிரி போலீசார் முருகன் பிணத்தை மீட்டு வழக்கு பதிவு செய்து பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Similar News