செய்திகள்
விபத்து (கோப்புப்படம்)

ஆம்பூர் அருகே பைக் கவிழ்ந்து மேஸ்திரி பலி

Published On 2020-02-06 11:20 GMT   |   Update On 2020-02-06 11:20 GMT
ஆம்பூர் அருகே பைக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் மேஸ்திரி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆம்பூர்:

ஆம்பூர் அடுத்த பாலூரை சேர்ந்தவர் நந்தகுமார் (வயது 29). அதே பகுதியை சேர்ந்தவர் பிரபு (வயது25). இருவரும் கட்டிட மேஸ்திரியாக வேலை செய்துவந்தனர்.

இந்த நிலையில் நேற்று வேலைக்கு சென்றவர்கள் இருவரும் இரவு பைக்கில் வீடு திரும்பினர். உமராபாத் அடுத்த கலாம் நகர் என்ற இடத்தில் பைக் வந்தபோது நிலை தடுமாறி இருவரும் பைக்கில் இருந்து கீழே விழுந்தனர். இந்த விபத்தில் 2 பேரும் படுகாயம் அடைந்தனர். நந்தகுமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து தகவலறிந்த உமராபாத் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பிரபுவை மீட்டு சிகிச்சைக்காக ஆம்பூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News