செய்திகள்
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

அரக்கோணத்தில் ரூ.7 கோடியில் பள்ளிக்கு புதிய கட்டிடம்- முதலமைச்சர் பழனிசாமி திறந்து வைத்தார்

Published On 2020-02-05 11:03 GMT   |   Update On 2020-02-05 11:03 GMT
வேலூர் மாவட்டம் அரக்கோணத்தில் ரூ.7 கோடியில் பள்ளிக்கு கட்டப்பட்ட புதிய கட்டிடத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
அரக்கோணம்:

அரக்கோணம் வெங்கடேசபுரம் பகுதியில் புதியதாக கட்டி முடிக்கப்பட்ட தலா 3½ கோடி மதிப்புள்ள 2 பள்ளி கட்டிடங்கள் திறப்பு விழா நடந்தது.

ஆதிதிராவிடர் நல ஆண்கள் மேல்நிலைப்பள்ளி கட்டிடங்களின் மொத்த மதிப்பு ரூ.7 கோடியிருக்கும் இந்த கட்டிடங்களை காணொலி காட்சி மூலமாக முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்ததர். இதை முன்னிட்டு 100 பேர் பார்க்கும் வகையில் தொலைக்காட்சி பெட்டி வைக்கப்பட்டுள்ளது. விழா மேடையில் வேலூர் கிழக்கு மாவட்ட செயலாளர் சு.ரவி எம்.எல்.ஏ., ராணிப்பேட்டை கலெக்டர் திவ்யதர்ஷினி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவில் அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் பிரகாஷ், நகர செயலாளர் பாண்டுரங்கன், நெமிலி ஒன்றிய செயலாளர் விஜயன், மாவட்ட முன்னாள் கவுன்சிலர் லோகநாதன், உள்ளிட்ட கட்சியின் அனைத்து தரப்பு நிர்வாகிகள் கூட்டுறவு சங்க நிர்வாகிகள், அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

காணொலி காட்சி திறப்பு விழாவிற்கு பின்னர் சு.ரவி எம்.எல்.ஏ. பள்ளி வளாகத்தில் குத்து விளக்கு ஏற்றி இனிப்பு வழங்கினார். பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் ரமேஷ்குமார் நன்றி கூறினார்.
Tags:    

Similar News