செய்திகள்
கல்பாக்கம் அருகே தூக்கில் ஆண் பிணம்
கல்பாக்கம் அருகே தூக்கில் தொங்கிய நிலையில் ஆண் பிணம் கிடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மாமல்லபுரம்:
கல்பாக்கம் அடுத்த சதுரங்கபட்டினம் மார்க்கெட் வீதியில் உள்ள கடை ஒன்றின் முன்னால் உள்ள ஆஸ் பெட்டாஸ் கூறை சீட்டின் கம்பியில் 45 வயது மதிக்கதக்க அடையாளம் தெரியாத ஆண் ஒருவர் தூக்கிட்டு இறந்து கிடந்தார்.
தகவல் அறிந்த போலீசார் பிணத்தை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவ மனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இவர் யார்? எதற்காக இங்கு வந்தார்? எவரேனும் கொலை செய்து தூக்கில் தொங்க விட்டனரா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.