செய்திகள்
கோப்பு படம்

மதுராந்தகம் அருகே பஸ்சை சிறைபிடித்து மாணவர்கள் போராட்டம்

Published On 2020-01-29 17:25 IST   |   Update On 2020-01-29 17:25:00 IST
மதுராந்தகம் அருகே தாமதமாக வந்த அரசு பஸ்சை மாணவர்கள் சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மதுராந்தகம்:

மதுராந்தகத்தில் இருந்து மேல்மருவத்தூர் வழியாக காட்டுக் கூடலூர், நேமம், அத்திவாக்கம் வழியாக அச்சிறுபாக்கம் வரை செல்லும் அரசு பஸ் இயக்கப்படுகிறது.

இதில் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் அதிக அளவில் சென்று வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று காலை நேமம் கிராமத்திற்கு அரசு பஸ் தாமதமாக வந்ததால் ஆத்திரம் அடைந்த மாணவர்கள் பஸ்சை சிறை பிடித்தனர். அச்சிறுபாக்கம் இன்ஸ்பெக்டர் சரவணன், மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போகச் செய்தார்.

Similar News