செய்திகள்
வேதாரண்யம் அருகே லோடு ஆட்டோ மோதி விவசாயி பலி
வேதாரண்யம் அருகே லோடு ஆட்டோ மோதி விவசாயி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேதாரண்யம்:
நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த வாய்மேடு காவல் சரகம் வாய்மேடு உடைய தேவன்காடு பகுதியைச் சேர்ந்தவர் மாணிக்கம். இவரது மகன் தங்கராசு (வயது 38). விவசாய கூலி வேலை செய்து வருகிறார். இவர் வாய்மேடு திருத்துறைப்பூண்டி சாலையில் திருத்துறைப்பூண்டியில் இருந்து வாய்மேடு நோக்கி வந்து கொண்டிருந்தார்.
அப்போது அவர் பின்னால் வந்த லோடு ஆட்டோ மோதியதில் தங்கராசு படுகாயமடைந்தார். அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு முதலுதவிக்காக திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவ மனையில் சேர்த்து பின்பு மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி தங்கராசு இறந்தார்.
இது குறித்து வாய்மேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.