செய்திகள்
தற்கொலை

வேதாரண்யத்தில் வி‌ஷம் குடித்து தொழிலாளி தற்கொலை

Published On 2020-01-28 10:16 GMT   |   Update On 2020-01-28 10:16 GMT
வேதாரண்யத்தில் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த தொழிலாளி வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

வேதாரண்யம்:

வேதாரண்யத்தை தாலுகா வாய்மேடு அடுத்த தாணிக்கோட்டகம் கிராமத்தைச் சேர்ந்வர் சுப்பிரமணியன் (வயது 48). விவசாய கூலிதொழிலாளி. இவர் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். 

சம்பவத்தன்று வயிற்று வலியால் அவதிப்பட்ட அவர் வீட்டிலிருந்த வி‌ஷ மருந்தை எடுத்து குடித்து விட்டார். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சுப்பிரமணியன் இறந்துவிட்டார். 

இது குறித்து வாய்மேடு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News