செய்திகள்
ஆலப்பாக்கத்தில் மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
போரூர்:
மதுரவாயல் அடுத்த ஆலப்பாக்கம் தனலட்சுமி நகர் 2-வது தெருவைச் சேர்ந்தவர் திரவ்புதின். இவரது மகள் பிரவீனாபானு (வயது 16). தனியார் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று இரவு அவர் வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து மதுரவாயல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.