செய்திகள்
விபத்து பலி

பெருந்துறையில் இன்று சாலை விபத்தில் தச்சு தொழிலாளி பலி

Published On 2020-01-25 10:25 GMT   |   Update On 2020-01-25 10:25 GMT
பெருந்துறையில் இன்று சாலை விபத்தில் தச்சு தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெருந்துறை:

திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியை சேர்ந்தவர் கணேசன் (வயது 35) தச்சு தொழிலாளி. இவர் ஈரோடு மாவட்டம் கங்காபுரத்தில் உள்ள தனது தாய் வீட்டுக்கு அடிக்கடி சென்று வருவது வழக்கம்.

அதை போல் கணேசன் தனது மோட்டார் சைக்கிளில் தாய் வீட்டுக்கு வந்தார். இன்று காலை மீண்டும் தாய் வீட்டிலிருந்து பல்லடம் செல்வதற்காக மோட்டார் சைக்கிளில் கிளம்பினார். பெருந்துறை அடுத்த சோளிபாளையம் பகுதியில் சென்று கொண்டிருந்த போது அவருக்கு முன்னால் சென்று கொண்டிருந்த லாரி மீது எதிர்பாராதவிதமாக கணேசன் மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் தலையில் பலத்த காயமடைந்த கணேசனை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து பெருந்துறை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரி அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News