செய்திகள்
நெல் விளைச்சல்

ஈரோடு மாவட்டத்தில் நெல் விளைச்சல் அமோகம்

Published On 2020-01-22 15:41 IST   |   Update On 2020-01-22 15:57:00 IST
ஈரோடு காலிங்கராயன் வாய்க்காலில் இந்த ஆண்டு 3500 ஏக்கர் நிலப்பரப்பில் ஒரு வயலில் நெல் விளைந்து அறுவடைக்கு தயாராக உள்ளது.
சூரம்பட்டி:

ஈரோடு மாவட்டத்தில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு பரவலாக நல்ல மழை பெய்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில் நல்ல மழை பெய்துள்ளதால் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவை அடைந்துள்ளது.

மேலும் மாவட்டத்திலுள்ள வரட்டுப்பள்ளம் அணை, குண்டேரிப்பள்ளம் அணை, ஏரி, குளங்கள் மற்றும் ஆழ்குழாய் கிணறுகளிலும் தண்ணீர் போதிய அளவில் உள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் .

இதை தொடர்ந்து விவசாயிகள் தங்களது நிலங்களில் நெல், கரும்பு, வாழை, மஞ்சள் போன்றவற்றை பயிரிட்டு வருகிறார்கள்.

ஈரோடு காலிங்கராயன் வாய்க்காலில் இந்த ஆண்டு 3500 ஏக்கர் நிலப்பரப்பில் ஒரு வயலில் நெல் விளைந்து அறுவடைக்கு தயாராக உள்ளது.

Similar News