செய்திகள்
சித்தோடு அருகே குடும்பத்தகராறில் பெண் தூக்குப்போட்டு தற்கொலை
சித்தோடு அருகே கணவன் மனைவிக்கு ஏற்பட்ட குடும்பத்தகராறில் பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சித்தோடு:
சித்தோடு அடுத்த செல்லப்பம்பாளையம் கருப்புரான் கோவில் வீதியைச் சேர்ந்தவர் தமிழரசன் .கூலி தொழிலாளி. இவரது மனைவி பிரியா (வயது 30). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.
இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இன்று காலை மீண்டும் தமிழரசனுக்கும் பிரியாவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் மனவேதனை அடைந்த பிரியா வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து சித்தோடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பிரியா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சித்தோடு போலீசார் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சித்தோடு அடுத்த செல்லப்பம்பாளையம் கருப்புரான் கோவில் வீதியைச் சேர்ந்தவர் தமிழரசன் .கூலி தொழிலாளி. இவரது மனைவி பிரியா (வயது 30). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.
இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இன்று காலை மீண்டும் தமிழரசனுக்கும் பிரியாவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் மனவேதனை அடைந்த பிரியா வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து சித்தோடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பிரியா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சித்தோடு போலீசார் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.