செய்திகள்
கோப்பு படம்

பவானி அருகே வாய்க்காலில் குளித்த வாலிபர் கழுத்து முறிந்து பலி

Published On 2020-01-21 10:26 GMT   |   Update On 2020-01-21 10:26 GMT
பவானி அருகே வாய்க்காலில் குறைந்த அளவு தண்ணீரில் டைவ் அடித்த வாலிபர் கழுத்து முறிந்து பலியானார்.
பவானி:

பவானி அடுத்து அந்தியூர் செம்புளிச்சாம்பளையம் பகுதியைச் சேர்ந்த சொக்க லிங்கம் மகன் தனபால் (வயது 31). இவர் சம்பவத்தன்று கல்பாவி அருகே உள்ள வாய்க்காலுக்கு குளிக்கச் சென்றார்.

தண்ணீர் குறைந்த அளவே இருந்தது பின்னர் தனபால் வாய்க்காலில் டைவ் அடித்தார். இதில் அவருக்கு கழுத்தில் பலத்த அடிபட்டு முறிவு ஏற்பட்டது. அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவரைமீட்டு உடனடியாக தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனில்லாமல் தனபால் பரிதாபமாக இறந்தார்.

இவருக்கு சித்ரா என்ற மனைவி திவ்யதர்ஷினி என்ற மகளும் ஹரிகரன் என்ற மகனும் உள்ளனர்.

இதுகுறித்து பவானி இன்ஸ்பெக்டர் தேவேந்திரன் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Tags:    

Similar News