செய்திகள்
விபத்து

சித்தோடு அருகே வேன் மோதி முதியவர் பலி

Published On 2020-01-21 10:18 GMT   |   Update On 2020-01-21 10:18 GMT
சித்தோடு அருகே வேன் மோதி முதியவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சித்தோடு:

பவானி, சித்தோட்டில் இருந்து கோவை செல்லும் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் நேற்று இரவு 11 மணியளவில் 55 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் நடந்து சென்றுகொண்டு இருந்தார். அவ்வழியாக வந்த வேன் ஒன்று எதிர்பாராத வகையில் முதியவர் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே அந்த முதியவர் இறந்தார்.

இதுகுறித்து தகவலறிந்த சித்தோடு போலீசார் சம்பவ இடம் சென்று இறந்து கிடந்த முதியவர் உடலை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

சிவப்பு நிற சட்டையும், லுங்கியும் அணிந்திருந்த அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என சித்தோடு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News