செய்திகள்
கடற்கரை கோவில் அருகே அகற்றப்படாத குப்பைகள்

விடுமுறை நாளில் கூட்டம்- மாமல்லபுரத்தில் குப்பைகள் குவிந்தன

Published On 2020-01-21 09:18 GMT   |   Update On 2020-01-21 09:18 GMT
மாமல்லபுரத்தில் குவிந்துள்ள குப்பைகளை உடனே அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மாமல்லபுரம்:

பொங்கல் தொடர் விடுமுறை நாட்களில் மாமல்லபுரத்தில் சுற்றுலா பயணிகள், செவ்வாடை பக்தர்கள் அதிகளவில் குவிந்தனர்.

இதனால் கடற்கரை மற்றும் புரதான சின்னங்கள் பகுதியில் அதிகளவில் குப்பைகள் குவிந்தன. அப்பகுதிகளில் பேரூராட்சி சார்பில் வைக்கப்பட்டிருந்த தரமற்ற குப்பை தொட்டிகள் அனைத்தும் சேதமடைந்துள்ளன.

இதனால் குப்பைகள் சிதறி கடற்கரை பகுதிகள் எங்கும் குவிந்து கிடக்கிறது சுகாதாரமற்ற நிலையில் அர்ச்சுனன் தபசு, வெண்ணெய் உருண்டை பாறை பகுதிகளில் மாடுகள் உலா வருகிறது.

நடைபாதை கடைகளின் குப்பைகள் ஐந்து ரதம், கடற்கரை கோவில் பகுதியில் ரோட்டோரம் கிடக்கிறது. தொடர் விடுமுறை முடிந்து இரண்டு நாட்கள் ஆகியும் சுகாதார தூய்மை பணிகளை வேகமாக செய்வதில் மாமல்லபுரம் பேரூராட்சி நிர்வாகம் அலட்சியம் காட்டி வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

வெளிநாட்டு பயணிகள் பெருமளவில் வந்து செல்லும் மாமல்லபுரத்தில் குவிந்துள்ள குப்பைகளை உடனே அகற்ற வேண்டும். அதிகாரிகள் அலட்சியம் காட்டக்கூடாது என்று கோரிக்கை எழுந்துள்ளது.

Tags:    

Similar News