செய்திகள்
கைது

கிண்டியில் மனைவியை கொன்ற கணவர் கைது

Published On 2020-01-20 09:53 GMT   |   Update On 2020-01-20 09:53 GMT
கிண்டியில் மனைவியை கொன்ற கணவர் ஆந்திராவில் கைது செய்யப்பட்டார். போலீசார் அவரை சென்னை அழைத்து வந்து விசாரிக்க முடிவு செய்து உள்ளனர்.

ஆலந்தூர்:

கிண்டி, மடுவின்கரை, மசூதி காலனி 5-வது தெருவை சேர்ந்தவர் பிரசாத். இவருடைய மனைவி உஷா (வயது 30). இவர்களுக்கு 5 வயதில் பெண் குழந்தை உள்ளது.

நேற்று காலை வீட்டில் இருந்த உஷா மர்மமாக இறந்து கிடந்தார். அவரது கணவர் பிரசாத், குழந்தையுடன் மாயமாகி இருந்தார்.

இது குறித்து கிண்டி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது பிரசாத், தனது மனைவி உஷாவை அடித்து கொலை செய்து இருப்பது தெரிந்தது. மேலும் மகளை ஆந்திராவில் உள்ள பெற்றோரிடம் ஒப்படைத்து தலைமறைவாகி விட்டதும் தெரிய வந்தது.

இந்த நிலையில் ஆந்திராவில் பதுங்கி இருந்த பிரசாத்தை போலீசார் கைது செய்தனர். அவர் போலீசாரிடம் கூறும்போது, “வீட்டில் இருந்த போது மனைவி உஷாவுடன் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த நான் உஷாவை தாக்கினேன்.

இதில் அவர் அருகில் உள்ள கிரைண்டரில் விழுந்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு இறந்து போனாள். இதனால் பயந்து போன நான் குழந்தையுடன் ஆந்திராவுக்கு தப்பி சென்றேன்” என்று கூறி உள்ளார்.

இதையடுத்து பிரசாத்தை சென்னை அழைத்து வந்து விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்து உள்ளனர்.

Tags:    

Similar News