செய்திகள்
விபத்து

மாமல்லபுரம் அருகே கார் மோதி தாய்-மகன் பலி

Published On 2020-01-20 06:42 GMT   |   Update On 2020-01-20 06:42 GMT
மாமல்லபுரம் அருகே கார் மோதி தாய், மகன் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மாமல்லபுரம்:

மாமல்லபுரம் அடுத்த புது கல்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் திலகவதி (38). இவரது மகன் திருமுருகன் (4). கோவளத்தில் உள்ள தனியார் பள்ளியில் எல்.கே.ஜி. படித்து வந்தான். இன்று காலை திலகவதி, மகன் திருமுருகனை பள்ளிக்கு அனுப்பி வைக்க அதேபகுதியில் கிழக்கு கடற்கரை சாலையை கடக்க முயன்றார்.

அப்போது பாண்டிச்சேரியில் இருந்து சென்னை நோக்கி வேகமாக சென்ற கார் அவர்கள் மீது மோதியது. இதில் திலகவதி அவரது மகன் திருமுருகன் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதுகுறித்து மாமல்லபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News