செய்திகள்
தற்கொலை

பவானி அருகே வீட்டில் தனியாக இருந்த பெண் தூக்குப்போட்டு தற்கொலை

Published On 2020-01-18 10:10 GMT   |   Update On 2020-01-18 10:10 GMT
பவானி அருகே வீட்டில் தனியாக இருந்த பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பவானி:

பவானி அருகே உள்ள சங்கரகவுண்டன் பாளையம் பகுதியை சேர்ந்தவர் ஹரிஹரன் அரசு பஸ் கண்டக்டர். இவரது மனைவி ரேணுகா (36). இவருக்கு ஒரு மகன் உள்ளான். பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறான்.

ரேணுகாவிற்கு கடந்த ஐந்து வருடங்களாக வயிற்றிலுள்ள கர்ப்ப பையில் கட்டியுள்ளதாக சிகிச்சை பெற்று வந்தாராம். இந்நிலையில் நேற்று அவரது கணவர் அவருடைய பெற்றோர்களை பார்க்க மயிலம்பாடி சென்றுவிட்டார். மகன் வெளியில் விளையாடச் சென்றபோது அவரது வீட்டில் தனியாக இருந்த நிலையில் வலி தாங்க முடியாமல் ரேணுகா தூக்கிப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தகவலின் பேரில் பவானி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சரஸ்வதி உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

Similar News