செய்திகள்
தற்கொலை

மொடக்குறிச்சி அருகே கட்டிட தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை

Published On 2020-01-17 10:39 GMT   |   Update On 2020-01-17 10:39 GMT
ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அருகே கட்டிட தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு:

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அடுத்த லக்காபுரம் அருகே உள்ள கரட்டாங்காடு பகுதியை சேர்ந்தவர் பழனி. இவரது மகன் விக்னேஷ் (வயது 21). கட்டிட தொழிலாளி.

சம்பவத்தன்று விக்னேஷ் வீட்டில் தூங்கி கொண்டு இருந்தார். விக்னேஷின் தந்தை அரச்சலூருக்கு வேலை வி‌ஷயமாக சென்றுவிட்டார். விக்னேஷின் தாயார் வயல் வேலைக்கு சென்று விட்டார்.

பின்னர் மாலை விக்னேஷின் தாயார் வேலை முடிந்து வீட்டுக்கு வந்து பார்த்த போது வீட்டில் உள்ள ஒரு அறையில் மகன் விக்னேஷ் தூக்குப்போட்டு தொங்கிக்கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது தாயார் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மகனை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரைப் பரிசோதித்த டாக்டர்கள் விக்னேஷ் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

விக்னேஷ் எதற்காக தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் என்று உடனடியாக தெரியவில்லை. இதுகுறித்து மொடக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News