செய்திகள்
படப்பை அருகே ரூ. 2 லட்சம் மதிப்புள்ள குட்கா-புகையிலை பறிமுதல்
படப்பை அருகே ஆந்திராவில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.2 லட்சம் மதிப்புள்ள குட்கா மற்றும் புகையிலை பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் இதுதொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
படப்பை:
படப்பை அருகே ஒரகடம் கூட்டு சாலையில் ஒரகடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் நடராஜன்- போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது ஒரு கார் வேகமாக வந்தது. போலீசார் அந்த காரை நிறுத்துமாறு சைகை காட்டினர். ஆனால் போலீசாரை கண்டதும் அந்த கார் மின்னல் வேகத்தில் சென்றது. போலீசார் அந்த வாகனத்தை விரட்டி சென்று பிடித்தனர்.
அப்போது அதில் தடைசெய்யப்பட்ட குட்கா, புகையிலை பொருட்கள் கடத்தி வந்தது தெரியவந்தது.
அந்த காரை ஓட்டி வந்த ஆந்திர மாநிலம் சித்தூர் அடுத்த பட்டாபி காலனி சேர்ந்த பாலமுருகன். அவருடன் வந்த அதே பகுதியை சேர்ந்த ரமேஷ் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து ரூ.2 லட்சம் மதிப்புள்ள குட்கா, பான்மாசாலா பொருட்கள், அவற்றை கடத்தி வந்த கார் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இருவரையும் ஸ்ரீபெரும்புதூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
தலைமறைவான பெருமாள் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர். குட்கா பொருட்கள் ஆந்திராவில் இருந்து ஒரகடத்துக்கு கடத்தி வந்தது தெரியவந்தது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
படப்பை அருகே ஒரகடம் கூட்டு சாலையில் ஒரகடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் நடராஜன்- போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது ஒரு கார் வேகமாக வந்தது. போலீசார் அந்த காரை நிறுத்துமாறு சைகை காட்டினர். ஆனால் போலீசாரை கண்டதும் அந்த கார் மின்னல் வேகத்தில் சென்றது. போலீசார் அந்த வாகனத்தை விரட்டி சென்று பிடித்தனர்.
அப்போது அதில் தடைசெய்யப்பட்ட குட்கா, புகையிலை பொருட்கள் கடத்தி வந்தது தெரியவந்தது.
அந்த காரை ஓட்டி வந்த ஆந்திர மாநிலம் சித்தூர் அடுத்த பட்டாபி காலனி சேர்ந்த பாலமுருகன். அவருடன் வந்த அதே பகுதியை சேர்ந்த ரமேஷ் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து ரூ.2 லட்சம் மதிப்புள்ள குட்கா, பான்மாசாலா பொருட்கள், அவற்றை கடத்தி வந்த கார் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இருவரையும் ஸ்ரீபெரும்புதூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
தலைமறைவான பெருமாள் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர். குட்கா பொருட்கள் ஆந்திராவில் இருந்து ஒரகடத்துக்கு கடத்தி வந்தது தெரியவந்தது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.