செய்திகள்
கைது

போலி விசாவில் வெளிநாடு அனுப்பி வாலிபரிடம் ரூ.5 லட்சம் மோசடி- நண்பர் கைது

Published On 2020-01-08 06:58 GMT   |   Update On 2020-01-08 06:58 GMT
போலி விசாவில் வெளிநாடு அனுப்பட்ட திருவண்ணாமலை சேர்ந்த வாலிபரிடம் ரூ.5 லட்சம் மோசடி செய்த நண்பரை போலீசார் கைது செய்தனர்.

ஆலந்தூர்:

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை சேர்ந்தவர் மூர்த்தி (வயது 28) எலக்ட்ரீசியன்.

இவரும், இவரது நண்பரான டோமினிக் ராஜ் என்பவரும் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தனர்.

இந்நிலையில் டோமினிக் ராஜ் ரஷியா நாட்டில் உள்ள அர்மேனியாவில் அதிக சம்பளத்தில் எலக்ட்ரீசியன் வேலை உள்ளது. ரூ.5 லட்சம் தந்தால் அந்த வேலைக்கு அனுப்பி வைக்கிறேன் என மூர்த்தியிடம் கூறினார்.

இதை நம்பிய மூர்த்தி வட்டிக்கு ரூ. 5 லட்சம் கடன் வாங்கி டோமினிக்ராஜிடம் கொடுத்தார்.

பணத்தை பெற்றுக் கொண்ட அவர் கடந்த ஆண்டு விசா கொடுத்து மூர்த்தியை ரஷியாவுக்கு அனுப்பினார்.

அங்குள்ள விமான நிலையத்தில் மூர்த்தியின் விசா, பணி நியமன ஆணை உள்ளிட்ட ஆவணங்களை பார்த்த அதிகாரிகள் அவை போலியானவை என தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து தூதரகம் மூலம் மூர்த்தி சென்னைக்கு திருப்பி அனுப்பப்பட்டார். தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அவர் டோமினிக்ராஜியிடம் பணத்தை திருப்பி கேட்டார். அப்போது அவர் மூர்த்தியை மிரட்டினார்.

இதுகுறித்து மூர்த்தி விமான நிலைய போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து டோமினிக்ராஜை கைது செய்தனர்.

Tags:    

Similar News