செய்திகள்
காஞ்சிபுரத்தில் குண்டர் சட்டத்தில் ரவுடி ஜெயிலில் அடைப்பு
காஞ்சிபுரத்தில் ரவுடியை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் பிரபு என்கிற ஏட்டு பிரபு (24). இவர் மீது காஞ்சிபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் உள்ள போலீஸ் நிலையங்களில் கொள்ளை, வழிப்பறி, கொலை, கொலை முயற்சி உள்பட 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. இதன் காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன்பு போலீசார் பிரபுவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வேலூர் சிறையில் அடைத்தனர்.
அவரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க காஞ்சிபுரம் கலெக்டர் பொன்னையாவிற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாமுண்டீஸ்வரி பரிந்துரை செய்தார். அதன் பேரில் பிரபுவை குண்டர் சட்டத்தில் ஜெயிலில் அடைக்க கலெக்டர் உத்தரவிட்டார்.