செய்திகள்
கோப்பு படம்

மொடக்குறிச்சி அருகே துணி துவைத்துக் கொண்டிருந்த மாணவியை வெட்டிய வாலிபர்

Published On 2020-01-04 17:20 IST   |   Update On 2020-01-04 17:20:00 IST
மொடக்குறிச்சி அருகே துணி துவைத்துக் கொண்டிருந்த மாணவியை வெட்டிய வாலிபர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு:

மொடக்குறிச்சி பகுதிக்கு உட்பட்ட பட்டறை வேலம் பாளையத்தில் இன்று காலை 14 வயது மாணவி குழாய் அடியில் துணி துவைத்துக் கொண்டி ருந்தார். அப்போது சுமார் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் அரிவாளுடன் வந்து அந்த மாணவியை வெட்டினார்.

இதில் மாணவிக்கு முகம், கழுத்து, கை போன்ற பகுதிகளில் வெட்டு விழுந்தது. மாணவியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். பின்னர் மாணவியை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக அந்த மாணவி சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார்.

இது குறித்து மொடக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Similar News