செய்திகள்
ஆதம்பாக்கத்தில் மாவா விற்ற பெண் கைது
ஆதம்பாக்கத்தில் மாவா விற்ற பெண்ணை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆலந்தூர்:
ஆதம்பாக்கம் அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் தேவி (33). இவர் ‘மாவா’ போதை பொருள் விற்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து ஆதம்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலன், அந்த பெண்ணை கைது செய்தார். கைதான தேவியிடம் இருந்து ஒரு கிலோ எடையுள்ள 100‘மாவா’ பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் விசாரணை நடக்கிறது.