செய்திகள்
பவானிசாகர் அணை

பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

Published On 2020-01-04 10:18 GMT   |   Update On 2020-01-04 10:18 GMT
நீலகிரி மலைப் பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவதால் பவானிசாகர் அணைக்கு வரும் நீர்வரத்து அதிகரித்து உள்ளது.
ஈரோடு:

ஈரோடு திருப்பூர் மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமாகவும், பல லட்சம் விவசாய விளை நிலங்களின் வாழ்வாதாரமாகவும் பவானிசாகர் அணை உள்ளது. பவானிசாகர் அணையின் முக்கிய நீர்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.

கடந்த ஆண்டில் மட்டும் நீர்பிடிப்பு பகுதியில் பலத்த மழை பெய்தாலும், வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்தாலும் பவானிசாகர் அணை 3 முறை தனது முழு கொள்ளளவான 105 அடியை எட்டியது. அதனைத் தொடர்ந்து பவானி ஆற்றுக்கு உபரி நீர் திறந்துவிடப்பட்டது.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக நீலகிரி மலைப் பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவதால் பவானிசாகர் அணைக்கு வரும் நீர்வரத்து அதிகரித்து உள்ளது.

இதன் காரணமாக கடந்த 1-ந் தேதி மீண்டும் முழு கொள்ளளவான 105 அடியை பவானிசாகர் அணை எட்டியது. தொடர்ந்து நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை பெய்து வருவதால் பவானிசாகர் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து வருகிறது.

இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணை 105 அடியில் உள்ளது. அணைக்கு 3597 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. பவானி ஆற்றுக்கு 1100 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
Tags:    

Similar News