செய்திகள்
மின்சாரம் நிறுத்தம்

ஈரோடு பகுதியில் 6-ந் தேதி மின் நிறுத்தம்

Published On 2020-01-04 15:47 IST   |   Update On 2020-01-04 15:47:00 IST
சூரியம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக 6-ந் தேதி மின் நிறுத்தம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு:

சூரியம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது.

இதையொட்டி வரும் 6-ந் தேதி (திங்கட்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை கீழ்கண்ட பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.

சித்தோடு, ராயபாளையம், சுண்ணாம்பு ஓடை, அமராவதி நகர், தண்ணீர் பந்தல்பாளையம், ஆர்.என். புதூர், கோண வாய்க்கால், லட்சுமி நகர், காளிங்கராயன் பாளையம், பெருமாள் மலை, ஐ.ஆர்.டி.டி., குமிளம் பரப்பு, கங்காபுரம், செல்லப்பன் பாளையம், பேரோடு, மாமரத்துப்பாளையம்.

மேட்டூப்பாளையம், நொச்சி பாளையம், தயிர் பாளையம், கொங்கம் பாளையம், நரிப்பள்ளம், எல்லப்பாளையம், சேமூர், சூளை, சொட்டையம் பாளையம், கே.ஆர்.பாளையம், ராசாம் பாளையம், தொட்டம்பட்டி, பி.பெ.அக்ரகாரம்.

மரவபாளையம், சி.எஸ். நகர், கே.ஆர்.குளம், காவேரி நகர், பாலாஜி நகர், மாணிக்கம் பாளையம், ஈ.பி.பி. நகர், எஸ்.எஸ்.டி. நகர். வேலான் நகர், ஊத்துக்காடு, வாவிக்கடை, பெருந்துறை சந்தை.

இந்த தகவலை ஈரோடு நகரியம் மின் வாரிய செயற் பொறியாளர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

Similar News