செய்திகள்
தற்கொலை

பெருந்துறை அருகே தாயாருக்கு போன் செய்து தற்கொலை செய்த பெண்

Published On 2020-01-03 15:41 IST   |   Update On 2020-01-03 15:41:00 IST
ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே தாயாருக்கு போன் செய்துவிட்டு பெண் தற்கொலை செய்துகொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஈரோடு:

பெருந்துறை அடுத்த வெள்ளோடு கொம்மக்கோவில் காலனியைச் சேர்ந்தவர் கார்த்திகேயன் லாரி டிரைவர். இவரது மனைவி கவிதா (வயது 31). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். கவிதா உடல்நலம் சரியில்லாமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் சம்பவத்தன்று இரவு கார்த்திகேயன் வேலைக்கு சென்று விட்டார். வீட்டில் கவிதா இருந்தார். அப்போது அவர் தனது தாய்க்கு போன் செய்து தனக்கு கடுமையான வயிற்றுவலி இருப்பதாக கூறினாராம்.

இந்நிலையில் வேலைக்கு சென்ற கார்த்திகேயன் வீட்டுக்கு திரும்பி வந்தார். வீட்டிற்குள்ளே வந்து பார்த்த போது கவிதா தூக்குப்போட்டு கொண்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆம்புலன்சில் வந்த மருத்துவர்கள் கவிதாவை பரிசோதனை செய்த போது அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இது குறித்து வெள்ளோடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து கவிதா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News