செய்திகள்
ஆம்புலன்சில் ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லப்பட்ட ஆசிரியர்

நம்பியூரில் ஓட்டு எண்ணும் போது மயங்கி விழுந்த ஆசிரியர்

Published On 2020-01-02 17:00 IST   |   Update On 2020-01-02 17:00:00 IST
நம்பியூரில் ஓட்டு எண்ணிக்கை தொடங்கி 30 நிமிடத்தில் ஆசிரியர் மயங்கி விழுந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
நம்பியூர்:

ஈரோடு மாவட்டம் நம்பியூர் ஊராட்சி ஒன்றிய பகுதிக்குட்பட்ட ஓட்டுகள் எண்ணும் பணி நம்பியூர் அருகே உள்ள குருமந்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் இன்று காலை நடந்தது. இதில் நம்பியூர் அருகே உள்ள மலையப்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வரும் சரவணன் என்பவர் இந்த ஓட்டு எண்ணும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார்.

ஓட்டு எண்ணிக்கை தொடங்கி 30 நிமிடத்தில் ஆசிரியர் சரவணன் திடீரென மயங்கி விழுந்தார். இதனால் வாக்கு எண்ணிக்கை மையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

உடனடியாக அங்கு ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு அவரை ஏற்றி கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Similar News