அ.தி.மு.க சார்பில் மக்கள் இ-சேவை மையம்: எம்எல்ஏக்கள் தொடங்கி வைத்தனர்
ஈரோடு:
அ.தி.மு.க மாநகர் மாவட்ட மாணவரணி சார்பில் மாணவரணி மாவட்ட செயலாளர் ரத்தன் பிரித்வி ஏற்பாட்டில் சூரம்பட்டிவலசு, வார்டு எண் 47-ல் அம்மா மக்கள் இ-சேவை மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கான திறப்பு விழா நடந்தது.
எம்.எல்.ஏ.க்கள் கே.வி. ராமலிங்கம், கே.எஸ்.தென்னரசு ஆகியோர் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கி புதிதாக அமைக்கப்பட்டுள்ள அம்மா மக்கள் இ-சேவை மையத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர்.
பகுதி செயலாளர்கள் பெரியார் நகர் மனோகரன், சூரம்பட்டி ஜெகதீஸ், கேசவமூர்த்தி, ஜெயராஜ் கோவிந்தராஜ், முருக சேகர், ஜெயலலிதா பேரவை மாவட்ட இணைச்செயலாளர் வீரக் குமார், மாணவரணி மாவட்ட இணைச்செயலாளர் நந்தகோபால், அண்ணா தொழிற்சங்க மாவட்ட இணைச் செயலாளர் மாதையன், சூரம்பட்டி தங்கவேலு உள்பட பலர் நிகழ்ச்சி கலந்து கொண்டனர்.
இந்த இ-சேவை மையத்தில் குடும்ப அட்டை பெயர் சேர்த்தல், நீக்குதல் ,ஆதார் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை விண்ணப்பித்தல், திருத்தம் செய்தல். வருமான சான்றிதழ், ஜாதி சான்றிதழ், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான சான்றிதழ், முதல் பட்டதாரி சான்றிதழ், வாரிசு சான்றிதழ், கணவனால் கைவிடப்பட்ட சான்றிதழ், ஆன்லைன் பட்டா சிட்டா வில்லங்க சான்றிதழ், பணபரிமாற்றம், ஈ.பி பில் கட்டணம், பான் கார்டு, பாஸ்போர்ட், வேலைவாய்ப்பு பதிவு செய்தல், டி.என்.பி.சி. அரசு தேர்வு பதிவு செய்தல், இரண்டு சக்கர வாகனங்களுக்கு இன்சூரன்ஸ் புதுப்பித்தல் போன்ற பணிகள் இலவசமாக செய்து கொடுக்கப்படும்.