செய்திகள்
சிட்லபாக்கத்தில் வீட்டில் கஞ்சா பதுக்கி விற்ற கல்லூரி மாணவர்கள் கைது
சிட்லபாக்கத்தில் வீட்டில் கஞ்சா பதுக்கி விற்ற கல்லூரி மாணவர்களை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 2½ கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
தாம்பரம்:
சிட்லபாக்கம் கணபதிபுரம் நாகாத்தம்மன் கோவில் தெருவில் வாலிபர்கள் சிலர் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி உள்ளனர்.
இந்த நிலையில் அந்த வீட்டில் இருந்து வாலிபர்கள் சண்டையிடும் சத்தம் அதிக அளவு கேட்டது, இது பற்றி அக்கம் பக்கத்தினர் சிட்லபாக்கம் போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.
போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்து விற்று வந்தது தெரிய வந்தது.
இதையடுத்து அங்கு தங்கி இருந்த தனியார் என்ஜினீயரிங் கல்லூரி மாணவர்கள் விக்னேஷ், கவுதம் மற்றும் அவரது நண்பர்கள் யஷ்வந்த்ராஜா, ஸ்ரீகாந்த், சதீஷ்குமார், அரவிந்த் ஆகிய 6 பேரை கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து 2½ கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. பிடிபட்டவர்களில் ஒருவர் பிரபல சினிமா பாடகர் ஒருவரின் பேரன் என்பது தெரிய வந்தது.
கைதானவர்கள் கல்லூரி மாணவர்களை குறிவைத்து கஞ்சா விற்று வந்துள்ளனர். அவர்களுக்கு கஞ்சா கிடைத்தது எப்படி? கூட்டாளிகள் யார்-யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சிட்லபாக்கம் கணபதிபுரம் நாகாத்தம்மன் கோவில் தெருவில் வாலிபர்கள் சிலர் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி உள்ளனர்.
இந்த நிலையில் அந்த வீட்டில் இருந்து வாலிபர்கள் சண்டையிடும் சத்தம் அதிக அளவு கேட்டது, இது பற்றி அக்கம் பக்கத்தினர் சிட்லபாக்கம் போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.
போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்து விற்று வந்தது தெரிய வந்தது.
இதையடுத்து அங்கு தங்கி இருந்த தனியார் என்ஜினீயரிங் கல்லூரி மாணவர்கள் விக்னேஷ், கவுதம் மற்றும் அவரது நண்பர்கள் யஷ்வந்த்ராஜா, ஸ்ரீகாந்த், சதீஷ்குமார், அரவிந்த் ஆகிய 6 பேரை கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து 2½ கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. பிடிபட்டவர்களில் ஒருவர் பிரபல சினிமா பாடகர் ஒருவரின் பேரன் என்பது தெரிய வந்தது.
கைதானவர்கள் கல்லூரி மாணவர்களை குறிவைத்து கஞ்சா விற்று வந்துள்ளனர். அவர்களுக்கு கஞ்சா கிடைத்தது எப்படி? கூட்டாளிகள் யார்-யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.