செய்திகள்
போலீசார் விசாரணை

வேதாரண்யத்தில் குளத்தில் மிதந்த முதியவர் உடல்- போலீசார் விசாரணை

Published On 2019-12-30 16:48 IST   |   Update On 2019-12-30 16:48:00 IST
வேதாரண்யத்தில் குளத்தில் 50 வயது மதிக்கத்தக்க முதியவர் பிணமாக கிடந்தார். அவர் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

வேதாரண்யம்:

வேதாரண்யம் நகராட்சிக்குட்பட்ட சாமியார் குட்டையில் சுமார் 55 வயது மதிக்கத்தக்க முதியவர் உடல் மிதந்தது. இதுபற்றி கிடைத்த தகவலின் பேரில் கிராம நிர்வாக அலுவலர் சுரேஷ், போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, குட்டையில் மிதந்த முதியவர் உடலை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.

இறந்த முதியவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது தெரியவில்லை. இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் கொடுத்த புகாரின் பேரில் வேதாரண்யம் போலீசார் வழக்குபதிவு செய்து, முதியவர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு வேதாரண்யம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News