செய்திகள்
தரம் தாழ்ந்து பேசுவதா?- பாஜகவுக்கு கருணாஸ் கண்டனம்
பெரியார் குறித்து சமீபத்தில் தமிழக பாஜகவின் டுவிட்டர் பக்கத்தில் வெளியான பதிவு தொடர்பாக கருணாஸ் எம்எல்ஏ கண்டனம் தெரிவித்துள்ளார்.
திருப்பத்தூர்:
திருப்பத்தூரில் கருணாஸ் எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறியதாவது:-
பெரியார் இல்லை என்றால் அண்ணா இல்லை. அண்ணா இல்லை என்றால் கலைஞர், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா போன்றவர்கள் இல்லை. இப்படித்தான் நமது வரலாறு.
பா.ஜனதா இவ்வளவு தரம் தாழ்ந்து அரசியல் செய்ய வேண்டுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. நான் பா.ஜனதாவுடன் கூட்டணி வைத்துக் கொள்ளவில்லை. அ.தி.மு.க.வுடன் தான் கூட்டணி வைத்துள்ளேன்.
எச்.ராஜா என்றைக்கும் நல்லது பேசியது கிடையாது. அவருடைய பேச்சை மக்கள் பெரிதாக எடுத்துக்கொள்ள மாட்டார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
திருப்பத்தூரில் கருணாஸ் எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறியதாவது:-
பெரியார் இல்லை என்றால் அண்ணா இல்லை. அண்ணா இல்லை என்றால் கலைஞர், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா போன்றவர்கள் இல்லை. இப்படித்தான் நமது வரலாறு.
அப்படி இருக்கும்போது இந்த மண்ணில் திராவிட கொள்கைகளையும் திராவிட இயக்கங்களையும் சுயமரியாதைகளையும் பொதுவுடமை கொள்கைகளையும் வளர்த்த, பெண்களுக்கு இட ஒதுக்கீடு போன்ற உரிமைகளையும் பெற்று தந்த பெரியாரை அரசியலுக்காக பா.ஜனதா தரம் தாழ்த்தி பேசுவது மல்லாந்து படுத்துக் கொண்டு எச்சிலை துப்பிக் கொள்வதுபோல் உள்ளது.
எச்.ராஜா என்றைக்கும் நல்லது பேசியது கிடையாது. அவருடைய பேச்சை மக்கள் பெரிதாக எடுத்துக்கொள்ள மாட்டார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.