செய்திகள்
வேதாரண்யம் அருகே விபத்தில் 3 பேர் காயம்
வேதாரண்யம் அருகே விபத்தில் 3 பேர் காயம் அடைந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் அடுத்த ஆயக்காரன்புலம் 3-ம் சேத்தியை சேர்ந்த செந்தில் நாதன் (வயது 25), இவர் நேற்று இரவு ஆயக்காரன்புலத்தில் இருந்து வாய்மேடு நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அதேபோல் வாய்மேட்டில் இருந்து ஆயக்காரன்புலம் நோக்கி கோகுல் (18), சோமசுந்தரம் (35) ஆகியோர் வந்து கொண்டிருந்தனர்.
அப்போது வாய்மேடு அருகே தகட்டூர் என்ற இடத்தில் இந்த இரு மோட்டார் சைக்களில் வந்தவர்களும் நோருக்கு நேராக மோதிக்கொண்டனர். இதில் 3 பேரும் பலத்த காயம் அடைந்தனர்.
அவர்களை மேல் சிகிச்சைக்காக நாகை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதுகுறித்து வாய்மேடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.