செய்திகள்
கைது

‘டிக்-டாக்’ வீடியோவில் கத்தியை காட்டி சீமானுக்கு மிரட்டல்- 5 வாலிபர்கள் கைது

Published On 2019-12-25 07:57 GMT   |   Update On 2019-12-25 07:57 GMT
‘டிக்-டாக்’ வீடியோவில் கத்தியை காட்டி நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு மிரட்டல் விடுத்தது தொடர்பாக தாம்பரத்தில் 5 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
தாம்பரம்:

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானை பற்றி சமூக வலைதளங்களில் சிலர் அவதூறாக கருத்துக்களை பதிவிடுகின்றனர்.

சில நேரங்களில் சீமானுக்கு மிரட்டல் விடுக்கும் வகையிலும் வீடியோ காட்சிகள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில் தாம்பரம் பகுதியில் கடந்த சில நாட்களாக இளைஞர்கள் மத்தியில் செல்போனில் டிக்டாக் வீடியோ ஒன்று வைரலாக பரவியது.

சுமார் 15 விநாடிகள் ஓடும் அந்த வீடியோவில் 5 வாலிபர்கள் கையில் கத்தியுடன் கானா பாடல் ஒன்றை பாடுவது போல காட்சி இடம் பெற்றுள்ளது. எதுகை மோனையுடன் கூடிய அந்த வீடியோ காட்சியில் சீமானை அவதூறாக பேசி மிரட்டுவது போன்ற வசனங்கள் இருந்தன.

இதுகுறித்து தாம்பரம் போலீசார் நடத்திய விசாரணையில் அதே பகுதியைச் சேர்ந்த அஜித், கிஷோர், நிஷாந்த், மணிகண்டன், சுரேஷ் ஆகிய 5 பேர் அந்த டிக்டாக் வீடியோவை வெளியிட்டது தெரிய வந்தது.

இதைத்தொடர்ந்து 5 பேரையும் போலீசார் கைது செய்தனர். கையில் ஆயுதங்களுடன் கும்பலாக சுற்றியதாக இவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

அவர்களில் 4 பேர் மீது ஏற்கனவே வழக்கு இருப்பது தெரிய வந்தது. அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

Tags:    

Similar News