செய்திகள்
தீ விபத்து ஏற்பட்ட இடம்.

காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் திடீர் தீ விபத்து

Published On 2019-12-23 08:33 GMT   |   Update On 2019-12-23 08:33 GMT
காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் இன்று காலை தீவிபத்து ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
காஞ்சிபுரம்:

காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் இன்று காலை ஏராளமான பக்தர்கள் சாமி கும்பிட்டுக் கொண்டிருந்தனர். சிலர் நந்தீஸ்வரர் சிலை முன்பு உள்ள நெய்விளக்கு ஏற்றும் அண்டாவில் விளக்கு ஏற்றிக்கொண்டிருந்தனர்.

அப்போது எல்லா விளக்குகளும் சேர்ந்து மொத்தமாக பந்தம் போல் பற்றி எரிந்தன. இதனால் அங்கு கரும்புகை ஏற்பட்டது. பக்தர்கள் அலறியடித்துக் கொண்டு ஓடினார்கள்.

உடனே கோவில் நிர்வாகி தியாகு தலைமையில், கோவில் ஊழியர்கள் அங்குள்ள தீயணைப்பு கருவிகள் மூலம் 15 நிமிடங்களில் தீயை அணைத்தனர். அதன்பிறகு பதட்டம் தணிந்தது.
Tags:    

Similar News